கிழக்குமண்டலம்
டிசம்பர் 01 ஜுரியா பணித்தளத்தில் நடைபெற்ற எழுப்புதல் கூடுகையில், ‘ஆண்டவரின் ஐக்கியத்தில் வளருதல்” என்ற தலைப்பின் கீழ் சகோ. பிலிப் தேவ செய்தியினைப் பகிர்ந்துகொண்டார்; 105 பேர் இக்கூடுகையில் பங்கேற்றனர். இக்கூடுகையில் கலந்துக்கொண்ட ஒவ்வொருவரும் ஆண்டவரின் ஐக்கியத்தில் வளரவும் மற்றும் அவர்களது ஆவிக்குரிய ஜீவியத்திற்காகவும், இப்பணித்தளத்தில் ஊழியம்செய்து வரும் சகோ. விஜய் மற்றும் சகோதரி குஷ்பு ஆகியோருக்காகவும் ஜெபிப்போம்.
டிசம்பர் 02 மான்பூர், அக்பர்பூர் மற்றும் கயா பணித்தளங்களில் நடைபெற்ற சிறப்புக் கூடுகைகளில் 400-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். தேசத்திற்காகவும், பணித்தள மக்களின் இரட்சிப்பிற்காகவும் விசுவாசிகள் ஒருமனதோடு ஜெபித்ததுடன், விசுவாசிகளின் ஆவிக்குரிய வளர்ச்சிக்காகவும் வசனங்களை அடிப்படையாகக் கொண்டு தேவ செய்தியுடன் ஆலோசனைகளும் வழங்கப்பட்டன. கலந்துகொண்ட விசுவாசிகள் தொடர்ந்து தேசத்திற்காக திறப்பில் நிற்கவும் மற்றும் தங்கள் ஆவிக்குரிய ஜீவியத்தில் வளரவும் ஜெபிப்போம்.
டிசம்பர் 03 குழந்தைகள் தினத்தை முன்னிட்டு நவம்பர் 16 அன்று பணித்தள ஆலயங்களில் சிறுவர் மற்றும் சிறுமியர்கள் மூலமாக நடைபெற்ற ஆராதனைகளை கர்த்தர் ஆசீர்வதித்தார். சிறுவர் சிறுமியர் கரங்களில் கர்த்தருக்குக் காணிக்கை படைக்க உண்டியல்கள் வழங்கப்பட்டு, அதன் மூலமாக புதிய கிராமங்களில் வரும் நாட்களில் ஏடீளு நடத்த எடுக்கப்பட்டுவரும் முயற்சிகளை கர்த்தர் ஆசீர்வதிக்க ஜெபிப்போம்.
டிசம்பர் 04 அக்பர்பூர் பணித்தளத்திற்கு அருகிலுள்ள காளேஜா கிராமத்தில் நவம்பர் 5 அன்று நடைபெற்ற சுவிசேஷக் கூட்டத்தில் 50 பேர் கலந்துகொண்டனர். ஜெப வேளையின்போது, கிறிஸ்துவை தங்கள் வாழ்க்கையில் ஏற்றுக்கொண்ட 10 பேர் தொடர்ந்து திருச்சபைக்கு வர ஆயத்தமாயிருக்கின்றனர். இத்தகைய கூட்டங்கள் ஒவ்வொரு பணித்தள ஆலயத்திலும் வரும் நாட்களில் நடைபெறவும், ஆத்துமாக்கள் சபையில் சேர்க்கப்படவும் ஜெபிப்போம்.
டிசம்பர் 05 மான்பூர் பணித்தளத்தில் நவம்பர் 19 அன்று ஜெம்ஸ் மருத்துவக் குழுவினரும் மற்றும் ர்யனௌ ழக ர்ழிந மருத்துவக் குழுவினரும் இணைந்து நடத்திய இலவச மருத்துவ முகாமின் மூலமாக 277 கிராம மக்கள் பயனடைந்தனர். மருத்துவ சிகிச்சையுடன், கிறிஸ்துவின் அன்பை அறிவிக்கும் சுவிசேஷக் கைப்பிரதிகளும் வழங்கப்பட்டன. இம்மருத்துவ முகாமில் பயனடைந்தோர், இயேசு கிறிஸ்துவையும் அறிந்துகொள்ள ஜெபிப்போம்.
டிசம்பர் 06 டோபி பணித்தளத்தில் நவம்பர் 21 அன்று நடைபெற்ற வட்டாரக் கன்வென்ஷன் கூட்டங்களில், ஐந்து திருச்சபைகளைச் சேர்ந்த 160 விசுவாசிகள் கலந்துகொண்டனர். ‘கர்த்தரில் பெலப்படுங்கள்’ என்ற தலைப்பின் கீழ் சகோ. ஜெயசீலன் தேவசெய்தியினைப் பகிர்ந்துகொண்டு, பங்கேற்றவர்களுக்காக ஜெபித்தார். பணித்தள விசுவாசிகளின் குடும்பங்களுக்காகவும் மற்றும் வரும் நாட்களில் ஆத்தும அறுவடையாளர்களாக அவர்கள் மாறவும் ஜெபிப்போம்.
