கிழக்கு மண்டலச் செய்திகள்
- கடந்த நாட்களில், 95 இடங்களில் சுமார் 4000-க்கும் மேற்பட்டோர்க்கு கிறிஸ்துவின் சுவிசேஷத்தினை அறிவிக்கவும் மற்றும் பணித்தளத்தில் வசிக்கும் ஏழை எளிய மக்களுக்கு உணவு, உடைகள் மற்றும் குளிர்காலத்திற்குத் தேவையான கம்பளிகளை வழங்கவும் கர்த்தர் கிருபைசெய்தார்.
- ஜனவரி 13 அன்று குராரு பணித்தளத்தில் நடைபெற்ற விசுவாச ஐக்கிய விருந்தில், விசுவாசிகள் ஆர்வமுடன் கலந்துகொண்டனர். ஒருவரோடு ஒருவர் ஐக்கியங்கொள்ளவும், கிறிஸ்துவின் அன்பினைப் பகிர்ந்துகொள்ளவும் ஏற்ற தருணமாக இது அமைந்தது.
- ஜனவரி 17 மற்றும் 18 ஆகிய தினங்கள் பகாட்பூர் மற்றும் கிரிடி ஆகிய பணித்தளங்களில் நடைபெற்ற வாலிபர்களுக்கான சிறப்புக் கூடுகையில் 50 வாலிப சகோதர சகோதரிகள் பங்கேற்றனர்.
- கயா பட்டணத்தின் ஆலயத்தில் ஜனவரி 22 அன்று நடைபெற்ற 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வு எழுதவிருக்கும் மாணவர்களுக்கான சிறப்புப் பிரார்த்தனையில் 22 மாணவர்கள் கலந்துகொண்டனர்.
- கிரிடி மற்றும் லுக்கியா பணித்தளங்களில் சிறுபிள்ளைகள் மற்றும் பள்ளிமாணவர்களுக்கு டியூசன் வகுப்புகளுடன் கிறிஸ்துவின் அன்பினையும் பகிர்ந்துகொள்ள கர்த்தர் உதவிசெய்தார்.
- ஐராகிய பணித்தளத்தில் ஆலய ஆராதனை நடைபெறுவதற்கு தொடர்ந்து எதிர்ப்புகள் அதிகரித்துவந்த நிலையில், ஜெபத்தைக் கேட்ட தேவன், கேவல் கிராமத்தில் ஆராதனையினைத் தொடங்க உதவிசெய்தார்; தேவனுக்கே மகிமை!
- ராஜ்கிர் பணித்தள ஆலயக் கட்டுமானப் பணிக்கான அங்கீகாரம் விரைவில் கிடைக்கவும், லோகர்தகா பணித்தள ஊழியர் இல்லக் கட்டுமானப் பணிகளுக்காகவும் மற்றும் அங்கு நடைபெற்றுக்கொண்டிருக்கும் மேற்கூரைப் பணிகளுக்காகவும் ஜெபிப்போம்.