June 2025

                                                      கிழக்குமண்டலம்



⏲ ஏப்ரல் 26 அன்று கூடு பணித்தளத்தில் நடைபெற்ற பெண்கள் கூடுகையில் 40 பேர் கலந்துக்கொண்டனர். சகோதரி கிருபா பால்  மற்றும் சகோதரி சுஸ்மா சுயம்பர் ஆகியோர் தேவசெய்தியினைப் பகிர்ந்துகொண்டு, வேத வசனங்கள் மற்றும் அனுபவச் சாட்சிகள் மூலமாக  பங்கேற்றோரை உற்சாகப்படுத்தி, ஆவிக்குரிய வாழ்வில் முன்னேற ஆலோசனைகளையும் வழங்கினர். 

கர்த்தருடைய பெரிய கிருபையினால், Peace-1 கோட்டத்தின் மந்தர் மற்றும்  பாலுமாத் ஆகிய பணித்தளங்களில் ஜெம்ஸ் சிக்காரியா வாலிப ஊழியர்கள் மூலமாக வாலிபர் கூட்டங்கள் நடைபெற்றறன. பாடல்கள், குறுநாடகங்கள், விளையாட்டுப்போட்டிகளுடன்  வாவிபருக்கேற்ற தெளிவான தேவசெய்தியும் வழங்கப்பட்டது. பாவம் நிறைந்த உலகில் ஆண்டவரில் எப்படி நிலை நிற்க வேண்டும் என்றும், அவருக்காகக் கனி தந்து அநேகரை அவர் பக்கம் வழிநடத்தவும் வாலிபருக்குப் போதிக்கப்பட்டது. அவ்வாறே, பான்சாரி பணித்தளத்தில் நடைபெற்றக் கூட்டத்தில், ஜெம்ஸ் பணித்தளத்தில் இரத்தசாட்சியாக மரித்த சகோதரர் மங்கள் பன்னா மற்றும் ஸ்தோவான் ஆகியோரது வாழ்க்கையின் தியாகமும் தைரியமும் கலந்துகொண்ட வாலிபர்களுக்குப் போதிக்கப்பட்டது. இக்கூட்டங்களில், 11 பேர் ஆண்டவருக்காக சேவைசெய்ய தங்களை அர்பணித்தனர்.

மே 7 மற்றும் 8 தேதிகளில் மகய்-1 கோட்ட ஊழியர்களுக்கான சிறப்பு கூட்டம்  சேக்பூரா மாவத்தில் உள்ள கட்னிகோல் பணித்தளத்தில் நடைபெற்றது. இக்கூட்டங்களில், சகோ.ராகேஷ் ரவி தேவ செய்தியளித்து ஊழியர்களை உற்சாகப்படுத்தினார்.தொடர்ந்து, சகோ. துரை மீடியா துறையை ஊழியர்கள் எவ்வாறு ஊழியத்திற்குப் பயன்படுத்த முடியும் என்று ஆலோசனை அளித்தார்.

மே மாதம் தொடக்கம் முதல், கிழக்கு மண்டலத்தின் பல்வேறு பணிகளிலும் மற்றும் கிராமங்களிலும் 15000 சிறுவர், சிறுமியர் மற்றும் மாணவர்களைச் சந்திக்கும் இலக்கோடு, விடுமுறை வேதாகமப் பள்ளி ஊழியங்கள் 'சந்தோஷமாயிருங்கள்" என்ற தலைப்பின் கீழ் நடைபெற்றன. இவ்வூழியங்களின் வாயிலாக, அநேக சிறுவர் சிறுமியருக்கு இயேசு கிறிஸ்துவின் அன்பினை அறிவிக்கவும் மற்றும் அவர்களை ஆவிக்குரிய வாழ்க்கையில் உற்சாகப்படுத்தவும் வழிநடத்தவும் கர்த்தர் உதவிசெய்தார்.

கோடர்மா  பணித்தளத்தின் ஆங்கில வழிப் பள்ளியில், மே 12-ம் தேதி நடைபெற்ற மருத்துவ முகாம் மூலமாக ஜெம்ஸ் பள்ளியின் அருகிலுள்ள கிராமங்களைச் சேர்ந்த மக்கள் மற்றும் விசுவாசிகள் 90 பேர் பயனடைந்தனர். முகாமில் கலந்துகொண்டவர்களுக்கு இலவசமாக மருந்துகளும் மருத்துவ ஆலோசனைகளும் வழங்கப்பட்டன. சகோதரி ரீனா கோபோர்த் தலைமையில், சிக்காரியா ஜெம்ஸ் மருத்துவமனையின் குழுவினர் இந்த மருத்துவ முகாமை சிறப்பாக நடத்தினர்; தேவனுக்கே மகிமை !    

லத்திகார் என்ற இடத்தில் நடைபெற்ற எழுப்புதல் கூட்டத்தில் 60 பேர் கலந்துகொண்டனர். சகோ. பால் தேவ செய்தியினைப் பகிர்ந்துகொண்டு ஜனங்களை உற்சாகப்படுத்தினார்;. கூட்டம் ஆசீர்வாதமாக அமைந்தது. ஆண்டவருக்காக எழுந்து நிற்கவும் சாட்சியாக வாழவும் ஜனங்கள் தங்களை அர்ப்பணித்ததோடு, லத்திகார் மாவட்ட மக்கள் இயேசு கிறிஸ்துவின் அன்பினை அறிந்துகொள்ளவும் ஊக்கமாக ஜெபித்தனர். இப்பணித்தளத்தில், ஆலயத்திற்கான இடம் வாங்கும் பணி விரைவில் முடிய ஜெபிப்போம்.


May 2025

                                    கிழக்குமண்டலம்


மசௌடி பணித்தளத்தில் நடைபெற்ற எழுப்புதல் கூட்டத்தில் 95 பேர் கலந்துகொண்டனர்; சகோ. ஜான் நாகேந்திரன் இக்கூட்டங்களில் கலந்துகொண்டு, கர்த்தருடைய வார்த்தையைப் பிரசங்கித்தார். தொடர்ந்து, அக்பர்பூர் பணித்தளத்தில் நடைபெற்ற விசுவாசிகளுக்கான சிறப்புக் கூடுகையில் 150 பேர் கலந்துகொண்டனர்; இக்கூட்டங்களில் சகோ. ஜான் நாகேந்திரன் மற்றும் சகோ. தயானந்த் ஆகியோர் தேவ செய்தியளித்தனர். 

ஜெகனாபாத் மாவட்டத்தின் மக்தம்பூர் பணித்தளத்தில் நடைபெற்ற உபவாசக் கூடுகையில், 200-க்கும் அதிகமானோர் கலந்துகொண்டனர். சகோ. ஜெயபிரகாஷ், சகோ. ராகேஷ் ரவி மற்றும் சகோ. ஜெயசீலன் ஆகியோர் இக்கூடுகையில் கர்த்தருடைய வார்த்தையைப் பகிர்ந்துகொண்டு, ஜனங்களை ஜெபத்தில் வழிநடத்தினர். பணித்தள ஊழியங்களுக்காகவும், தேசத்தின் தேவைகளுக்காகவும் ஒருமனதுடன் இணைந்து ஜெபிக்க கர்த்தர் உதவிசெய்தார்.

கயா பணித்தளத்தில், கிழக்கு மண்டல மிஷனரிகளின் பிள்ளைகளுக்காக நடைபெற்ற கூடுகையில் 50 பிள்ளைகள் பங்கேற்றனர். சகோ. டேனி மற்றும் சகோதரி ஜெசி ஆகியோர் சிறப்பு விருந்தினராக இக்கூடுகையில் கலந்துகொண்டு, தேவசெய்தியளித்து, குழு கலந்துரையாடல்கள் மற்றும் விளையாட்டுப் போட்டிகள் மூலமாக பிள்ளைகளை உற்சாகப்படுத்தினர். 

மிகவும் பின்தங்கிய நிலையில் வசித்துவரும் நவ்கடி கிராமத்தின் 50 பிள்ளைகளைச் சந்திக்கவும், பாடல்கள் மற்றும் வசனங்கள் மூலமாக கிறிஸ்துவின் அன்பினை அவர்கள் இதயத்தில் விதைக்கவும் கர்த்தர் உதவிச்செய்தார். 

நவாதா மாவட்டத்தின் ரஜௌலி பணித்தளத்தில் ஆலயம் கட்டப்படுவதற்காக, நீண்ட நாட்கள் ஏறெடுக்கப்பட்டுவந்த ஜெபத்தின் பலனால், ஆலயத்திற்கான நிலத்தினை வாங்க கர்த்தர் உதவிசெய்தார்; தேவனுக்கே மகிமை!

ஜோரியா பணித்தளத்தில் கட்டப்பட்ட ஊழியர் இல்லத்தினை ஜெபத்துடன் அர்ப்பணிக்க தேவன் கிருபை செய்தார்; இந்நிகழ்ச்சியில், பணித்தள ஊழியர்கள் மற்றும் விசுவாசிகள் கலந்துகொண்டனர்.



April 2025

  கிழக்கு மண்டலம்




• மகதம்பூர் பணித்தளத்தில் நடைபெற்ற பெண்கள் கூடுகையில் 150பேர் பங்கேற்றனர்; இக்கூடுகையில், 'தேவன் விரும்புகிற வாழ்க்கை" என்றகருப்பொருளின் கீழ் சகோதரி ஜாய் ஜெயசீலன் மற்றும் சகோதரி அர்ச்சனா ராஜேஷ் ஆகியோர் கர்த்தருடைய வார்த்தையைப் பகிர்ந்துகொண்டனர். கூடுகையின்போது நடத்தப்பட்ட விளையாட்டுகள், பகிரப்பட்ட சாட்சிகள் மற்றும் செய்திகள் பெண்களின் ஆவிக்குரிய வாழ்க்கைக்கு உந்துகோலாய் அமைந்தன.

• பெங்களுர் MPTC சகோதர சகோதரிகள், ஜார்க்கண்ட் மாநிலத்தின் மான்தர், கூடு மற்றும் பாலுமாத் ஆகிய பணித்தளங்களைச் சந்தித்து, பாத்தேபூர் இல்லச் சிறுவர்களை உற்சாகப்படுத்தி, பணித்தள விசுவாசிகளுக்கான சிறப்புக் கூட்டங்களிலும் பங்கேற்க கர்த்தர் உதவிசெய்தார்.

• பீஹார் மாநிலம் அர்வல் மாவட்டத்தின் டெல்பா பணித்தளத்தில் நடைபெற்ற விசுவாசிகளுக்கான உபவாசக் கூடுகையில் 100 பேர் பங்கேற்றனர்; சகோ. ஜெயபிரகாஷ் கர்த்தருடைய வார்த்தையைப் பகிர்ந்துகொண்டார்.

• டோபி, குராரு மற்றும் டெக்காரி ஆகிய பணித்தளங்களில் நடைபெற்ற வட்டாரக் கன்வென்ஷன் கூட்டங்கள் ஆசீர்வாதமாக அமைந்தன. சகோ. தயானந்தன், சகோ. ராகேஷ், சகோ. ராமாசங்கர் மற்றும் சகோ. ஜுனுராஜ் ஆகியோர் இக்கூட்டங்களில் கர்த்தருடைய செய்தியைப் பகிர்ந்துகொண்டனர். தொடர்ந்து, டெக்காரி தாலுகாவில் நடைபெற்ற ஊழியர்களுக்கான கருத்தரங்கில் சகோ. ராகேஷ் டேவிட் மற்றும் சகோ. ஜெயசீலன் ஆகியோர் தேவ செய்தியளித்து ஊழியங்களுக்காக ஜெபித்தனர்.

• மார்ச் 7 அன்று மான்பூர் பணித்தளத்தில் நடைபெற்ற வாலிபர் கூடுகையில் 90 வாலிபர்கள் கலந்துகொண்டனர். இக்கூடுகையில் சகோ. ஜெயசீலன் மற்றும் சகோ. தயானந்தன் ஆகியோர் வாலிபர்களுக்கேற்ற ஆலோசனைகளை வேத வசனத்தின் அடிப்படையில் அளித்து, ஆவிக்குரிய வாழ்க்கையின் அவர்கள் முன்னேறவும் வழிகாட்டினர்.

• பெண்கள் தினத்தைத் தொடர்ந்து, மார்ச் 9 அன்று கயா பணித்தள ஆலயத்தில் நடைபெற்ற ஆராதனையில், பாடல்வேளை, ஆராதனை மற்றும் செய்தி வேளை ஆகியவற்றை பெண்களே முன்னின்று நடத்தினர்; தேவனுக்கே மகிமை!

• ராஜ்கிர் மற்றும் ராஜொலி ஆகிய பணித்தளங்களில் விரைவில் ஆலயக் கட்டுமானப் பணிகள் தொடங்கப்படவும், லோகர்தகா பணித்தளத்தில் நடைபெறவிருக்கும் போதகர் இல்ல அர்ப்பணிப்பிற்காகவும் ஜெபிப்போம்.

March 2025

 கிழக்கு மண்டலம்


அருவல் மாவட்டத்தில் நடைபெற்ற விசுவாசிகளுக்கான உபவாசக்கூடுகையில், அருவல், பாளிதாத், கலேர் மற்றும் டேல்பா பணித்தளங்களைச் சேர்ந்த 108 விசுவாசிகள் கலந்துகொண்டு தேசத்திற்காகவும் மற்றும் மாவட்டத்திற்காகவும் பாரத்துடன் ஜெபித்தனர். இக்கூடுகையில் சகோ. ஜெயபிரகாஷ் மற்றும் தேவ ஊழியர்கள் கலந்துகொண்டு தேவசெய்தியளித்து, ஜனங்களை ஜெபத்தில் வழிநடத்தினர்.

மகய்-1 கோட்டத்தின் மசௌடி மற்றும் ஷேக்புரா பணித்தள ஆலயங்களில் நடைபெற்ற முழு இரவு ஜெபங்களில், பணித்தள மக்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டு, பணித்தள ஊழியங்களுக்காகவும் மற்றும் பல்வேறு ஜெப விண்ணப்பங்களுக்காகவும் ஜெபித்தனர்.

ராஜ்கிர் பணித்தள ஆலயக் கட்டுமானத்திற்கான அரசு அனுமதி கிடைக்க உதவிசெய்த தேவனுக்கு ஸ்தோத்திரம்; இப்பணித்தளத்தில் விரைவில் ஆலயம் கட்டப்படவும், விடுதலையோடு ஜனங்கள் தேவனை ஆராதிக்கவும் ஜெபிப்போம். 

குர்தா சபையில் பிப்ரவரி 14 அன்று நடைபெற்ற உபவாசக் கூடுகையில், 70 விசுவாசிகள் பங்கேற்றனர்; இக்கூடுகையில், சகோ. ஜெய்பிரகாஷ் கர்த்தருடைய வார்த்தையைப் பகிர்ந்துகொண்டார். 

சியராம்பூர் பணித்தளத்தின் சமூகப் பயிற்சி மையத்தில் நடைபெற்ற சிறுவர்களுக்கான சிறப்புக் கூட்டத்தின்போது, பாடல், பொம்மலாட்டம், கதை மற்றும் வேத வசனங்கள் மூலமாக, 44 சிறுவர்களுக்கு கிறிஸ்துவின் அன்பு அறிவிக்கப்பட்டது.

ராஜவரியா பணித்தளத்தில் நடைபெற்ற கன்வென்ஷன் கூட்டங்களில், சகோ. தயானந்தன் தேவ செய்தியினைப் பகிர்ந்துகொண்டார்; இக்கூட்டங்களில், 160 பேர் பங்கேற்று தேவ ஆசீர்வாதத்தைப் பெற்றனர். 

பிப்ரவரி 12 முதல் 14 வரையிலான மூன்று நாட்கள், கயா பணித்தள ஆலயத்தில் யோவான் சுவிசேஷப் புத்தகத்திலிருந்து சகோ. ஜிபுராஜ் மூலமாக வேதாகம வகுப்புகள் நடத்தப்பட்டன. 60-க்கும் மேற்பட்ட விசுவாசிகள் இவ்வகுப்புகளில் பங்கேற்றனர். விசுவாசிகள் சத்தியத்தை அறிந்துகொள்ளவும், தவறான உபதேசங்களை அடையாளம் கண்டுகொள்ளவும் இவ்வகுப்புகள் பிரயோஜனமுள்ளதாயிருந்தன.

மகத் காலனியின் அருகிலுள்ள மூஸ்தாபாத் கிராமத்தின் சிறுபிள்ளைகளுக்கு, பாடல்கள் மற்றும் வேதாகமக் கதைகள் மூலமாக கிறிஸ்துவின் அன்பினை அறிவிக்க கர்த்தர் உதவிசெய்தார். 

ராஜ்கிர் ஆலயக் கட்டுமானப் பணி விரைவில் தொடங்கப்படவும், லோகர்தகா பணித்தள போதகர் இல்லக் கட்டுமானப் பணி விரைவில் தடையின்றி முடிக்கப்படவும் ஜெபிப்போம். 

FEBRUARY 2025

கிழக்கு மண்டலச் செய்திகள்


  • கடந்த நாட்களில், 95 இடங்களில் சுமார் 4000-க்கும் மேற்பட்டோர்க்கு கிறிஸ்துவின் சுவிசேஷத்தினை அறிவிக்கவும் மற்றும் பணித்தளத்தில் வசிக்கும் ஏழை எளிய மக்களுக்கு உணவு, உடைகள் மற்றும் குளிர்காலத்திற்குத் தேவையான கம்பளிகளை வழங்கவும் கர்த்தர் கிருபைசெய்தார். 
  • ஜனவரி 13 அன்று குராரு பணித்தளத்தில் நடைபெற்ற விசுவாச ஐக்கிய விருந்தில், விசுவாசிகள் ஆர்வமுடன் கலந்துகொண்டனர். ஒருவரோடு ஒருவர் ஐக்கியங்கொள்ளவும், கிறிஸ்துவின் அன்பினைப் பகிர்ந்துகொள்ளவும் ஏற்ற தருணமாக இது அமைந்தது. 
  • ஜனவரி 17 மற்றும் 18 ஆகிய தினங்கள் பகாட்பூர் மற்றும் கிரிடி ஆகிய பணித்தளங்களில் நடைபெற்ற வாலிபர்களுக்கான சிறப்புக் கூடுகையில் 50 வாலிப சகோதர சகோதரிகள் பங்கேற்றனர்.
  • கயா பட்டணத்தின் ஆலயத்தில் ஜனவரி 22 அன்று நடைபெற்ற 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வு எழுதவிருக்கும் மாணவர்களுக்கான சிறப்புப் பிரார்த்தனையில் 22 மாணவர்கள் கலந்துகொண்டனர்.  
  • கிரிடி மற்றும் லுக்கியா பணித்தளங்களில் சிறுபிள்ளைகள் மற்றும் பள்ளிமாணவர்களுக்கு டியூசன் வகுப்புகளுடன் கிறிஸ்துவின் அன்பினையும் பகிர்ந்துகொள்ள கர்த்தர் உதவிசெய்தார். 
  • ஐராகிய பணித்தளத்தில் ஆலய ஆராதனை நடைபெறுவதற்கு தொடர்ந்து எதிர்ப்புகள் அதிகரித்துவந்த நிலையில், ஜெபத்தைக் கேட்ட தேவன், கேவல் கிராமத்தில் ஆராதனையினைத் தொடங்க உதவிசெய்தார்; தேவனுக்கே மகிமை!
  • ராஜ்கிர் பணித்தள ஆலயக் கட்டுமானப் பணிக்கான அங்கீகாரம் விரைவில் கிடைக்கவும், லோகர்தகா பணித்தள ஊழியர் இல்லக் கட்டுமானப் பணிகளுக்காகவும் மற்றும் அங்கு நடைபெற்றுக்கொண்டிருக்கும் மேற்கூரைப் பணிகளுக்காகவும் ஜெபிப்போம்.