Jan 2026
December 2025
கிழக்குமண்டலம்
டிசம்பர் 01 ஜுரியா பணித்தளத்தில் நடைபெற்ற எழுப்புதல் கூடுகையில், ‘ஆண்டவரின் ஐக்கியத்தில் வளருதல்” என்ற தலைப்பின் கீழ் சகோ. பிலிப் தேவ செய்தியினைப் பகிர்ந்துகொண்டார்; 105 பேர் இக்கூடுகையில் பங்கேற்றனர். இக்கூடுகையில் கலந்துக்கொண்ட ஒவ்வொருவரும் ஆண்டவரின் ஐக்கியத்தில் வளரவும் மற்றும் அவர்களது ஆவிக்குரிய ஜீவியத்திற்காகவும், இப்பணித்தளத்தில் ஊழியம்செய்து வரும் சகோ. விஜய் மற்றும் சகோதரி குஷ்பு ஆகியோருக்காகவும் ஜெபிப்போம்.
டிசம்பர் 02 மான்பூர், அக்பர்பூர் மற்றும் கயா பணித்தளங்களில் நடைபெற்ற சிறப்புக் கூடுகைகளில் 400-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். தேசத்திற்காகவும், பணித்தள மக்களின் இரட்சிப்பிற்காகவும் விசுவாசிகள் ஒருமனதோடு ஜெபித்ததுடன், விசுவாசிகளின் ஆவிக்குரிய வளர்ச்சிக்காகவும் வசனங்களை அடிப்படையாகக் கொண்டு தேவ செய்தியுடன் ஆலோசனைகளும் வழங்கப்பட்டன. கலந்துகொண்ட விசுவாசிகள் தொடர்ந்து தேசத்திற்காக திறப்பில் நிற்கவும் மற்றும் தங்கள் ஆவிக்குரிய ஜீவியத்தில் வளரவும் ஜெபிப்போம்.
டிசம்பர் 03 குழந்தைகள் தினத்தை முன்னிட்டு நவம்பர் 16 அன்று பணித்தள ஆலயங்களில் சிறுவர் மற்றும் சிறுமியர்கள் மூலமாக நடைபெற்ற ஆராதனைகளை கர்த்தர் ஆசீர்வதித்தார். சிறுவர் சிறுமியர் கரங்களில் கர்த்தருக்குக் காணிக்கை படைக்க உண்டியல்கள் வழங்கப்பட்டு, அதன் மூலமாக புதிய கிராமங்களில் வரும் நாட்களில் ஏடீளு நடத்த எடுக்கப்பட்டுவரும் முயற்சிகளை கர்த்தர் ஆசீர்வதிக்க ஜெபிப்போம்.
டிசம்பர் 04 அக்பர்பூர் பணித்தளத்திற்கு அருகிலுள்ள காளேஜா கிராமத்தில் நவம்பர் 5 அன்று நடைபெற்ற சுவிசேஷக் கூட்டத்தில் 50 பேர் கலந்துகொண்டனர். ஜெப வேளையின்போது, கிறிஸ்துவை தங்கள் வாழ்க்கையில் ஏற்றுக்கொண்ட 10 பேர் தொடர்ந்து திருச்சபைக்கு வர ஆயத்தமாயிருக்கின்றனர். இத்தகைய கூட்டங்கள் ஒவ்வொரு பணித்தள ஆலயத்திலும் வரும் நாட்களில் நடைபெறவும், ஆத்துமாக்கள் சபையில் சேர்க்கப்படவும் ஜெபிப்போம்.
டிசம்பர் 05 மான்பூர் பணித்தளத்தில் நவம்பர் 19 அன்று ஜெம்ஸ் மருத்துவக் குழுவினரும் மற்றும் ர்யனௌ ழக ர்ழிந மருத்துவக் குழுவினரும் இணைந்து நடத்திய இலவச மருத்துவ முகாமின் மூலமாக 277 கிராம மக்கள் பயனடைந்தனர். மருத்துவ சிகிச்சையுடன், கிறிஸ்துவின் அன்பை அறிவிக்கும் சுவிசேஷக் கைப்பிரதிகளும் வழங்கப்பட்டன. இம்மருத்துவ முகாமில் பயனடைந்தோர், இயேசு கிறிஸ்துவையும் அறிந்துகொள்ள ஜெபிப்போம்.
டிசம்பர் 06 டோபி பணித்தளத்தில் நவம்பர் 21 அன்று நடைபெற்ற வட்டாரக் கன்வென்ஷன் கூட்டங்களில், ஐந்து திருச்சபைகளைச் சேர்ந்த 160 விசுவாசிகள் கலந்துகொண்டனர். ‘கர்த்தரில் பெலப்படுங்கள்’ என்ற தலைப்பின் கீழ் சகோ. ஜெயசீலன் தேவசெய்தியினைப் பகிர்ந்துகொண்டு, பங்கேற்றவர்களுக்காக ஜெபித்தார். பணித்தள விசுவாசிகளின் குடும்பங்களுக்காகவும் மற்றும் வரும் நாட்களில் ஆத்தும அறுவடையாளர்களாக அவர்கள் மாறவும் ஜெபிப்போம்.
November 2025
கிழக்குமண்டலம்
நவம்பர் 1 டெக்காரி மற்றும் மான்பூர் ஆகிய பணித்தளங்களில், 'ஆயத்தமாயிருங்கள்" என்ற கருப்பொருளின் கீழ், ஜெம்ஸ் பெண்கள் ஊழியங்களின் (GEMS WET) மூலமாக நடத்தப்பட்ட பெண்கள் கூடுகையில் 162 சகோதரிகள் கலந்துகொண்டனர். பாடல் மற்றும் ஆராதனை வேளைகளைத் தொடர்ந்து, பல்வேறு ஜெபக்குறிப்புகளுக்காக ஜெபிக்கவும், விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொள்ளவும் ஒருவரோடொருவர் ஐக்கியம் கொள்ளவும் அத்துடன் தேவ செய்தியைக் கேட்கவும் இக்கூடுகையின்போது சகோதரிகளுக்கு வாய்ப்பு கிடைத்தது. இக்கூடுகையினைத் தொடர்ந்து, ஒவ்வொரு பணித்தள சபையிலும், இரண்டு சகோதரிகள் பணித்தள பெண்கள் ஊழியங்களைத் தொடர அர்ப்பணிக்கப்பட்டனர். பணித்தளங்களில் நடைபெற்றுவரும் பெண்கள் ஊழியங்களுக்காகவும் மற்றும் ஜெம்ஸ் பெண்கள் ஊழியக் குழுவினருக்காகவும் ஜெபிப்போம்.
நவம்பர் 3 ஷேக்பூரா, காக்கோ, மக்தம்பூர் ஆகிய பணித்தளங்களில் 'வாழ்க்கையின் நோக்கம்" என்ற கருப்பொருளின் கீழ் நடைபெற்ற வாலிபர் கூடுகையில் 246 பேர் கலந்துகொண்டனர்; சகோ. வென்னிலவன் மற்றும் குழுவினர் தேவ செய்தியுடன் பாடல்கள், ஆலோசனைகள் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளின் வாயிலாக வாலிபரை கிறிஸ்துவண்டை நடத்தினர். காக்கோ பணித்தளத்தில் 18 வாலிபர்கள் ஊழியத்திற்கென்று தங்களை அர்ப்பணித்தனர். தொடர்ந்து, கூடு, சந்துவா, மன்டர் பணித்தளங்களில் அக்டோபர் 16 முதல் 18 வரை நடைபெற்ற வாலிபர் கூட்டத்தில் 306 வாலிபர் பங்கேற்றனர். 'பிதாவினிடத்திற்குத் திரும்புங்கள்" என்ற கருப்பொருள் அடங்கியச் செய்தியினைத் தொடர்ந்து வாலிபர்களுக்கேற்ற ஆலோசனைகளும் வழங்கப்பட்டன. இக்கூடுகையின்போது, 12 வாலிபர் ஊழியத்திற்கென்று தங்களை அர்ப்பணித்தனர். அர்ப்பணித்த வாலிபர்கள் அர்ப்பணிப்பில் நிலைத்து நிற்கவும், விசுவாசத்தில் வளரவும் ஜெபிப்போம்.
நவம்பர் 4 அன்டர்கன்ஜ் பணித்தளத்தில் அக்டோபர் 19 அன்று நடைபெற்ற எழுப்புதல் கூட்டத்தில் 75 பேர் கலந்துகொண்டனர். 'சத்தியத்தை அறிந்துகொள்ளுங்கள்" என்ற தலைப்பில் சகோ. பால் கர்த்தருடைய செய்தியைப் பகிர்ந்துகொண்டார். இக்கூட்டங்களில் பங்கேற்றோர் வேத வசனத்தின்படி வாழவும், அப்பணித்தளத்தின் எழுப்புதலுக்குக் காரணமாகவும் ஜெபிப்போம்.
நவம்பர் 5 தெத்தர்டாட் பணித்தளத்தில் அக்டோபர் 10 அன்று நடைபெற்ற பெண்கள் கூடுகையில் ' புத்தியுள்ள ஸ்திரீ " என்ற தலைப்பின் கீழ் சகோ. சுஸ்மா சொயம்பர் கர்த்தருடைய செய்தியைப் பகிர்ந்துகொண்டார்; இக்கூடுகையில் 49 பேர் கலந்துகொண்டனர். கூடுகையில் கலந்துகொண்ட பெண்களின் ஆவிக்குரிய வாழ்க்கைக்காகவும், இப்பணித்தளத்தில் நடைபெற்றுவரும் ஊழியங்களுக்காகவும் ஜெபிப்போம்.
October 2025
கிழக்குமண்டலம்
அக்டோபர் : 01 சிவடா பணித்தளத்தில் ஆகஸ்ட் 31 அன்று ஞாயிறு ஆராதனையின்போது, சமூக விரோதிகள் சிலர் ஆலயத்தினுள் புகுந்து, ஆராதனையைத் தடுத்து, போதகரையும் மற்றும் ஆராதிக்கக் கூடிவந்திருந்த விசுவாசிகளையும் மிரட்டிச் சென்றனர்; என்றபோதிலும், கர்த்தருடைய கிருபையினால், இப்பணித்தளத்தில் ஆராதனை தடையின்றி தொடர்ந்து நடைபெற்றுவருகின்றது. இப்பணித்தளத்தில் ஊழியம் செய்துவரும் ஊழியருக்காகவும் மற்றும் பணித்தள விசுவாசிகள் விசுவாசத்தில் ஸ்திரப்படவும் ஜெபிப்போம்.
அக்டோபர் : 02 காக்கோ பணித்தளத்தில் செப்டம்பர் 4 அன்று நடைபெற்ற எழுப்புதல் கூட்டத்தில் 130 பேர் கலந்துகொண்டனர். விசுவாசிகள் வசனத்திலும் மற்றும் விசுவாசத்திலும் வேரூன்ற இக்கூடுகை உதவியது. இக்கூட்டத்தில், சகோ. ஜெகன் கர்த்தருடைய வார்த்தையைப் பகிர்ந்துகொண்டார். இப்பணித்தளத்தில், போதகர் இல்லம் மற்றும் பணித்தள ஆலயச் சுற்றுச் சுவர் விரைவில் கட்டப்படவும், விசுவாசிகள் ஆவிக்குரிய வாழ்க்கையில் முன்னேறவும், பணித்தள ஆலய முன்னேற்றத்திற்காகவும் ஜெபிப்போம்.
அக்டோபர் : 03 எங்கர்சராய் பணித்தளத்தில் செப்டம்பர் 5 அன்று நடைபெற்ற விசுவாசிகளுக்கான சிறப்புக் கூட்டத்தில் 120 பேர் பங்கேற்றனர்; சகோதரர் அவதேஷ் கர்த்தருடைய செய்தியைப் பகிர்ந்துகொண்டார். விசுவாசிகளின் ஆவிக்குரிய வாழ்க்கையின் வளர்ச்சிக்கும் மற்றும் ஆத்தும ஆதாயப் பணியில் அவர்களை உற்சாகப்படுத்தவும் இக்கூடுகை வழிவகுத்தது. இப்பணித்தளத்தில் நடைபெறும் சிறுவர் ஊழியங்களுக்காகவும், இங்கு நடைபெறும் சபை ஊழியத்தை கர்த்தர் ஆசீர்வதிக்கவும் மற்றும் அமைந்துள்ள நாலந்தா மாவட்டத்தில் கர்த்தர் கிரியைசெய்யவும், ஜனங்கள் உயிர்மீட்சியடையவும் ஜெபிப்போம்.
அக்டோபர் : 04 ஹல்திகோச்சா பணித்தளத்தில் செப்டம்பர் 17 அன்று நடைபெற்ற ஒருநாள் உபவாசக் கூடுகையில், சபை மக்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டு சொந்த கிராம மக்களுக்காகவும் மற்றும் சுற்றியுள்ள கிராம மக்கள் தீய வழிகளிலிருந்து விடுபடவும் பாரத்துடன் ஜெபித்தனர். இக்கூடுகையில், சகோ. பால் கர்த்தருடைய வார்த்தையைப் பகிர்ந்துகொண்டார்.
அக்டோபர் : 05 பாலுமாத் பணித்தளத்தில் செப்டம்ர் 18 அன்று நடைபெற்ற விசுவாசிகளுக்கானக் கூடுகையினை கர்த்தர் ஆசீர்வதித்தார். இக்கூடுகையில், ‘தரிசனம் தேவை’ என்ற தலைப்பின் கீழ் சகோ. பால் கர்த்தருடைய செய்தியைப் பகிர்ந்துகொண்டார். பங்கேற்ற விசுவாசிகள், ஆவிக்குரிய ஜீவியத்தில் பெலப்படவும், சமுதாயத்தில் சாட்சியாக வாழவும், தங்கள் வாழ்க்கையைக் குறித்தும் மற்றும் திருச்சபையைக் குறித்தும் தரிசனத்தோடு செயல்படவும் ஜெபிப்போம்.
அக்டோபர் : 06 நயபஜார் பணித்தளத்தில் செப்டம்பர் 19 அன்று நடைபெற்ற விசுவாசிகளுக்கான எழுப்புதல் கூட்டத்தில் 40 பேர் பங்கேற்றனர். சகோ. ரமாசங்கர் ‘தெபோரா’ மற்றும் ‘பவுல்’ ஆகியோரை மையமாகக் கொண்டு கர்த்தருடைய செய்தியைப் பகிர்ந்துகொண்டார். இப்பணித்தளத்தில் ஊழியத்திற்கு உண்டாகும் எதிர்ப்புகள் நீங்கவும், விரைவில் ஆலயம் கட்டப்படவும் ஜெபிப்போம்.
SEP 2025
கிழக்குமண்டலம்
செப்டம்பர் 01 மகாய் 2 கோட்டத்தின் மாவ் பணித்தளத்தில் நடைபெற்ற பெண்கள் கூடுகையில் 15 பேர் கலந்துக்கொண்டனர். சகோதரி ஜாஸ்மின் ஜெயசீலன், எபிரெயர் 12:1 வசனத்தினை மையமாகக் கொண்டு தேவச் செய்தியினைப் பகிர்ந்துகொண்டார். தொடர்ந்து, சகோதரி லவ்லி மூலமாக பெண்களின் வாழ்க்கைக்கடுத்த சுகாதார விழிப்புணர்வும் கொடுக்கப்பட்டது. பணித்தள பெண்கள் மத்தியில் செய்யப்படும் ஊழியங்கள் நல்ல பலனைத் தரவும், பெண்கள் மூலமாக குடும்பங்கள் கிறிஸ்துவண்டைத் திரும்பவும் ஜெபிப்போம்.
செப்டம்பர் 02 ஆகஸ்ட் 1 அன்று ரஜோலி பணித்தளத்தில் உபவாசக் கூடுகை நடைபெற்றது; 40 பேர் பங்கேற்று தேசத்திற்காகவும், தங்கள் பணித்தளத்தில் செய்யப்பட்டுவரும் ஊழியங்களுக்காகவும் பாரத்தோடும் ஒருமனதோடும் தேவ சமூகத்தில் ஜெபித்தனர். இப்பணித்தளத்தில் ஆலயம் கட்டப்பட வாங்கப்பட்டுள்ள நிலத்தினைப் பதிவு செய்வதில் ஏற்பட்டுள்ள பிரச்சனைகள் மாறவும் மற்றும் ஆலயக் கட்டுமானப் பணி விரைவில் தொடங்கப்படவும் ஜெபிப்போம். ஆகஸ்ட் 3 அன்று படுக்காவ் பணித்தளத்தில் நடைபெற்ற பெண்கள் கூட்டத்தில் சகோ. சித்தார்த் கலந்துக்கொண்டு தேவ செய்தியளித்தார்; 40–திற்கும் மேற்பட்ட பெண்கள் இக்கூட்டத்தில் கலந்துக்கொண்டனர். இப்பணித்தளம் அமைந்துள்ள ஹஜாரிபாத் மாவட்டத்தில் எதிர்ப்புகள் மாறவும் மற்றும் நடைபெறும் ஊழியங்களுக்காகவும் ஜெபிப்போம்.
செப்டம்பர் 03 கோடர்மா பணித்தளத்தில் சீஷத்துவப் பயிற்சியினை நிறைவுசெய்த 11 மாணவர்களுக்கு நடைபெற்ற சான்றளிப்பு நிகழ்ச்சியினை கர்த்தர் ஆசீர்வதித்தார். இப்பயிற்சியினை நிறைவு செய்தவர்களில், மூன்று மாணவர்கள் வேதாகம மேற்படிப்பிற்காக தர்பங்கா பணித்தளத்திற்குச் செல்லவிருக்கின்றனர். சீஷத்துவப் பயிற்சி பெற்ற மாணவர்களுக்காகவும், சபையிலும் மற்றும் சமுதாயத்திலும் அவர்கள் சாட்சியுள்ள வாழ்க்கை வாழவும் மற்றும் சீஷத்துவப் பயிற்சியில் (னுவுஊ) இந்த வருடமும் அநேக வாலிபர்கள் இணைந்து பயிற்சி பெறவும் ஜெபிப்போம்
செப்டம்பர் 04 கயா பணித்தளத்தில் ஜெம்ஸ் ஊழியர்கள் மற்றும் தலைவர்களுக்கான பயிற்சி வகுப்புகளை (GILEAD) ஆகஸ்ட் 20 அன்று தொடங்க கர்த்தர் உதவிசெய்தார். இந்நிகழ்ச்சியில் சகோ. அகஸ்டின் ஜெபக்குமார், சகோ. ப்ரெடி ஜோசப், Dr. விஜய்காந்த் ஆகியோர் கலந்துகொண்டு பயிற்சியின் முக்கியத்துவத்தை விளக்கினர். இரண்டு ஆண்டுகள் தொடர்ந்து நடைபெறவிருக்கும் இப்பயிற்சி வகுப்புகளுக்காகவும், பயிற்சிபெறும் ஊழியர்கள் மற்றும் பயிற்சி அளிக்கும் தலைவர்களுக்காகவும் ஜெபிப்போம். மகய் 1 கோட்டத்தின் பிக்ரம் பணித்தளத்தில் நடைபெற்ற உபவாசக் கூட்டத்தில் 70 பேர் கலந்துக்கொண்டு பணித்தள ஊழியங்களுக்காகவும் மற்றும் தேசத்திற்காகவும் பாரத்துடன் ஜெபித்தனர். சகோ. நந்தலால் தேவ செய்தியளித்து, ஜனங்களை ஜெபத்தில் வழி நடத்தினார். தேசத்திற்காகவும் மற்றும் எதிர்ப்புகள் நிறைந்த பணித்தளங்களில் விரைவில் ஆலயங்கள் கட்டப்படவும் ஜெபிப்போம்.
செப்டம்பர் 05 ஆகஸ்ட் 14 அன்று பலித்தாத் பணித்தளத்தில் வாலிபர் கூடுகை நடைபெற்றது; 30 பேர் இக்கூடுகையில் பங்கேற்றனர். 'கர்த்தருக்குப் பிரியமாய் வாழ்வது எப்படி' என்ற தலைப்பின்கீழ் சகோ. ராஜா தேவ செய்தியினைப் பகிர்ந்துகொண்டார். கொடுத்தார். இதுபோன்ற கூட்டங்கள் ஒவ்வொரு பணித்தளங்களிலும் நடைபெற ஜெபிப்போம். லத்திகார் பணித்தளத்தில் 'GP என்ற கிராமத்தில் உள்ள அரசாங்கப் பள்ளியில் ஆகஸ்ட் 17 அன்று நல்லொழுக்கப் பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும், பாடல்கள் மற்றும் கதைகள் மூலமாக 50 சிறுவர்களுக்கு கிறிஸ்துவின் அன்பு அறிவிக்கப்பட்டது.
August 2025
கிழக்குமண்டலம்
ஆகஸ்ட் 02 மகாய் 2 கோட்டத்தின் கயா பணித்தளத்தில், ஜூலை 5 அன்று நடைபெற்ற வாலிபர் கூடுகையில் 140 வாலிப சகோதர சகோதரிகள் கலந்து கொண்டனர். சென்னையைச் சேர்ந்த சகோ. ஜான் இருதயராஜ் மற்றும்
சகோ. தயானந்தன் ஆகியோர் தேவ செய்தியளித்து, வாலிபர்களின் வாழ்க்கைக்கு ஏற்ற ஆலோசனைகளையும் வழங்கி அவர்களுக்காக ஜெபித்தனர். சகோ. ஜோஷ்வா நடத்திய பாடல், ஆராதனை, விளையாட்டு மற்றும் வேத வினாப் போட்டிகள் வாலிபரை ஆண்டவருக்குள் வேரூன்ற உதவின. அவ்வாறே, மகாய்-1 கோட்டத்தின் பேலா பணித்தளத்தில் ஜூலை 17 அன்று நடைபெற்ற வாலிபர் கூட்டத்தில், 37 வாலிபர் கல்ந்துகொண்டனர். யோசேப்பைப் போல எப்படி பரிசுத்தமாய் வாழ வேண்டும் என்ற கருப்பொருளின் கீழ், சகோ. ஜெகன் மற்றும் சகோ. தம்பிதுரை ஆகியோர் வழங்கிய செய்திக்கு, ஜெப வேளையின் போது வாலிபர் தங்களை அர்ப்பணித்தனர். வரும் நாட்களில் ஒவ்வொரு திருச்சபையிலும் வாலிபர் கூடுகைகள் நடைபெறவும் மற்றும் வாலிபர் மத்தியில் செய்யப்படும் ஊழியங்கள் நல்ல பலனைத் தரவும் ஜெபிப்போம்.
ஆகஸ்ட் 03 "சந்தோஷமாயிருங்கள்" என்ற தலைப்பின் கீழ் நடைபெற்றுவரும் பணித்தளச் சிறுவர் ஊழியத்தின் வாயிலாக, 14,000 அதிகமான சிறுவர் சிறுமியருக்கு கிறிஸ்துவின் அன்பினை எடுத்துச் சொல்லவும், கிறிஸ்துவுக்குள் அவர்களை வழிநடத்தவும் கர்த்தர் உதவி செய்தார்; தேவனுக்கே மகிமை! கடந்த மாதத்தில் ஜெம்ஸ் பள்ளிகளிலும் மற்றும் பிற பள்ளிகளிலும் எவ்விதத் தடையுமின்றி சிறுவர் ஊழியத்தினை நிறைவேற்ற கர்த்தர் கொடுத்த வாய்ப்புக்காகக் கர்த்தருக்கு நன்றி சொல்லுகிறோம். ஊழியர்களின் பயண பாதுகாபிற்காகவும், நல்ல காலச் சூழ்நிலைகளுக்காகவும், எந்தெந்த கிராமங்களில் சிறுவர் ஊழியங்கள் நடைபெற்றதோ, அந்தந்தக் கிராமங்களில் ஆராதனை கூடுகை நடைபெறவும் ஜெபிப்போம் .
ஆகஸ்ட் 04 சன்துவா பணித்தளத்தில் ஜூலை 18 அன்று நடைபெற்ற விசுவாசிகளுக்கான உபவாசக்கூட்டத்தில் 50 பேர் கலந்துகொண்டனர். "பரிசுத்த ஆவியை துக்கப்படுத்தகூடாது" என்ற தலைப்பின் கீழ் சகோ. பிலிப் திருக்கி அளித்த செய்திக்கு விசுவாசிகள் தங்களை ஒப்புக் கொடுத்ததுடன், பணித்தள மக்களுக்காகவும், ஊழியங்களுக்காகவும் மற்றும் தேசத்திற்காகவும் பாரத்துடன் இணைந்து ஜெபித்தனர்.
ஆகஸ்ட் 05 ஹில்சா பணித்தளத்தில் ஜூலை 18 அன்று எழுப்புதல் கூட்டம் நடைபெற்றது; 55 பேர் கலந்துகொண்டு வசனத்தைக் கேட்டனர். சகோ.ஜெகன் மற்றும் சகோ. ராகேஷ் ரவி ஆகியோர் தேவசெய்தியளித்தனர். இக்கூட்டத்தில் கலந்துகொண்ட அனைவரும் ஆண்டவருக்காகத் தீவிரமாய்ச் செயல்பட ஜெபித்துகொள்ளுங்கள். ராஜ்கீர் மற்றும் ராஜொலி பணித்தளங்களில் ஆலயக் கட்டுமானப் பணிகள் தொடங்கப்படவும், குராரு பணித்தளத்தில் ஊழியர் இல்லம் விரைவில் தடையின்றி கட்டிமுடிக்கப்படவும் ஜெபிப்போம்.
July 2025
கிழக்குமண்டலம்
ஜுலை 02 மகய்-2 கோட்டத்தின் அக்பர்பூர் மற்றும் டோபி பணித்தளங்களில் நடைபெற்ற வாலிபர் கூட்டத்தில் 105 வாலிப சகோதர சகோதரிகள் பங்கேற்றனர். பாடல்கள், குறுநாடகங்கள், வேத வினா போட்டி ஆகியவற்றைத் தொடர்ந்து, வாலிப நாட்களில் தேவன் விரும்பும் வாழ்க்கை வாழ்வது எப்படி? என்ற கருப்பொருளின் கீழ் அளிக்கப்பட்ட தேவசெய்திக்கு அநேகர் தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்தனர். அர்ப்பணித்தவர்கள் வரும் நாட்களில் ஆண்டவருக்கு சாட்சிகளாக வாழ ஜெபிப்போம்.
ஜுலை 03 காக்கோ பணித்தளத்தில் ஜுன் 1 அன்று நடைபெற்ற இலவச மருத்துவ முகாமின் வாயிலாக 70 பேர் பயனடைந்தனர். வரும் நாட்களில் பல்வேறு பணித்தளங்களில் இதுபோன்று நடைபெறவிருக்கும் மருத்துவ முகாம்களுக்காகவும், வருகை தரும் மக்கள் கிறிஸ்துவின் அன்பையும் அறிந்துகொள்ளவும் ஜெபிப்போம்.
ஜுலை 04 'சந்தோஷமாயிருங்கள்"என்ற தலைப்பின் கீழ், பணித்தள ஆலயங்களில் விடுமுறை வேதாகமப் பள்ளி ஊழியங்களை நடத்தவும், பத்தாயிரத்திற்கும் அதிகமான பிள்ளைகளுக்கு கிறிஸ்துவின் அன்பினை அறிவிக்கவும் கர்த்தர் கிருபைசெய்தார். விடுமுறை வேதாகமப் பள்ளியில் கலந்துகொண்ட பிள்ளைகளுக்காகவும் மற்றும் அவர்களது பெற்றோர் கிறிஸ்துவை அறிந்துகொள்ளவும் ஜெபிப்போம்.
ஜுலை 05 PEACE 1 கோட்டத்தின் ஹால்திகோட்சா பணித்தளத்தில் நடைபெற்ற பெண்கள் கூட்டத்தில் 35 சகோதரிகள் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் சகோதரி ஷப்னம் கர்த்தருடைய வார்த்தையைப் பகிர்ந்துகொண்டு, ஜெபத்திலும் வழிநடத்தினார். பெண்கள் மூலமாக பணித்தளங்களில் செய்யப்பட்டுவரும் ஊழியங்களுக்காகவும் மற்றும் பணித்தள பெண்களின் இரட்சிப்பிற்காகவும் ஜெபிப்போம்.
ஜுலை 06 ராஜ்கீர் மற்றும் ராஜொலி பணித்தளங்களில் விரைவில் ஆலயக் கட்டுமான பணிகள் தொடங்கப்படவும் மற்றும் பணித்தள ஊழியர்கள் மற்றும் குடும்பத்தினரின் சுகத்திற்காகவும் ஜெபிப்போம். ஜெபியுங்கள்.






