April 2026

 


ஏப்ரல் 1 Peace 1 கோட்டத்தின் ஹல்திகோட்ஜா பணித்தளத்தில் நடைபெற்ற பெண்கள் கூட்டத்தில் 45 விசுவாசிகள் பங்கேற்றனர். பல ஆண்டுகளாக தீவிரவாதிகளால் பாதிக்கப்பட்டிருந்த இந்த பணித்தளத்தில், ஊழியங்கள் தொடர்ந்து நடைபெற்றுவந்தாலும், பணித்தளத்தில் ஊழியத்திற்கான அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்படவும் மற்றும் விசுவாசிகள் பாரம்பரியப் பழக்கங்களிலிருந்து மீட்கப்படவும் ஜெபிப்போம்.

ஏப்ரல் 2 'லத்திகார் பணித்தளத்தில், சகோ. பிரகாஷ் மின்ச் அவர்களது இல்லத்தில், மார்ச் 6 அன்று சிறப்பு வீட்டுக் கூட்டம் நடைபெற்றது; 50 பேர் கலந்துகொண்ட இந்தக் கூட்டத்தில், அநேகர் விடுதலை பெற்றனர். இப்பணித்தள விசுவாசிகள் வசனத்திலும் பரிசுத்த ஜீவியத்திலும் நிலைநிற்க ஜெபிப்போம். இந்த பணித்தள ஊழியர் சகோ. உமேஷ்-காகவும் மற்றும் இப்பணித்தளத்தில் விரைவில் ஆலயம் கட்டப்படவும் ஜெபிப்போம்.   

ஏப்ரல் 3 'மகய்  1 கோட்டத்தின்  மகதம்புர்  பணித்தளத்தில் மார்ச் 13 அன்று நடைபெற்ற பெண்கள் கூடுகையில் சகோதரி ஜாஸ்மின் தேவசெய்தியினைப் பகிர்ந்துகொண்டார்; 80-க்கும் மேற்பட்ட பெண்கள்  இக்கூடுகையில் கலந்துகொண்டனர். பெண்கள் குடும்பத்தில் ஆண்டவருக்காக உற்சாகமாய்ச் செயல்படும்போது முழுக் குடும்பமும் ஆசீர்வதிக்கப்படும் என்ற போதனையுடன், குடும்ப அங்கத்தினரின் இரட்சிப்பிற்காகவும் ஜெபம் ஏறெடுக்கப்பட்டது.  விசுவாசிகள் மூலமாக குடும்பத்திலும், அவர்கள் வசிக்கும் கிராமத்திலும் அதிகமானோர் ஆண்டவரை ஏற்றுகொள்ள ஜெபிப்போம்.  

ஏப்ரல் 4 'குராரு பணித்தளத்தில் மார்ச 12 அன்று நடைபெற்ற வட்டாரக் கன்வென்ஷன் கூட்டத்தில், 110 விசுவாசிகள் கலந்துகொண்டனர். 'தடைகளைத் தகர்போம்" என்ற தலைப்பில் செய்திகள் அளிக்கப்பட்டன. தனிப்பட்ட வாழ்க்கையில் வருகின்ற தடைகளையும் மற்றும் வெளியிலிருந்து வருகின்ற தடைகளையும் மேற்கொள்வது எப்படி? என்ற தலைப்பின் கீழ் சகோ. ஜெயசீலன் மற்றும் சகோ. தயானந்த் சிங் ஆகியோர் கர்த்தருடைய செய்தியைப் பகிர்ந்துகொண்டனர். கூட்ட முடிவில் ஜனங்களின் விடுதலைக்காகவும் பாதுகாப்பிற்காகவும் ஜெபம் ஏறெடுக்கப்பட்டது. விசுவாசிகள் எந்த சூழ்நிலையிலும் ஆண்டவருக்காக சாட்சியாக வாழ ஜெபிப்போம். 

ஏப்ரல் 5 வருங்காலத் தலைமுறைகளான சிறுபிள்ளைகளுக்கும் மற்றும் இளைஞர்களுக்கும் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு, ஒவ்வொரு சபையிலும் சிறுவர்களுக்கான ஞாயிறு பள்ளி நடத்தப்படவும், அதன்மூலம் சிறுபிள்ளைகள் ஆண்டவரைத் தேடவும், பாடல்கள் மற்றும் வசனத்தை வாசிக்கவும் உற்சாகப்படுத்தப்பட்டனர். அதுபோல, ஒவ்வொரு மாதமும் நடைபெற்றுவரும் இளைஞர்களுக்கான கூட்டங்களில், வேதத்தின்படி ஒழுக்கத்துடனும் மற்றும் பரிசுத்தத்துடனும் வாழ இளைஞர்கள் அறிவுறுத்தப்படுவதோடு, ஆண்டவரோடு தனிபட்ட உறவை ஏற்படுத்தவும், சாட்சியாக ஜீவிக்கவும் வழிநடத்தப்படுகின்றனர். ராஜ்கீர் மற்றும் ராஜொலி பணித்தளங்களில் ஆலயக் கட்டுமானப் பணிக்கான வேலைகள் நடைபெற்றுவருகின்றன; இப்பணிகளில் தடைகள் வராமலிருக்கவும், விக்ரம் பணித்தளத்தில் நிலம் வாங்கப்படவும் ஜெபிப்போம்.